Tuesday 1 October 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்1, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.

அதேபோல், 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பணிபுரியக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்&2ஐ கடந்த 18ம் தேதி சுமார் 4 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், இரண்டு தேர்வுக்களுக்குமான கீ ஆன்சரைகடந்த மாதம் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால், டி.ஆர்.பி. வெளியிட்ட கீ ஆன்சரில்ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் வருவதாகவும், சில கேள்விகளில் குளறுபடிகள் இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் ஆதாரத்துடன் புகார்களை தெரிவித்திருந்தனர்.

இந்தச் சூழலில் புதிய கீ ஆன்சரையும், தேர்வு முடிவையும் டி.ஆர்.பி. எப்போது வெளியிடும் என்றும், புதிய கீ ஆன்சர் வெளியிடும்போது, தவறான கேள்விகளுக்கு கூடுதல் மார்க் வழங்கப்படுமா என்றும் தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு குறித்து டி.ஆர்.பி. அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள் அனைத்தும் திருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், புதிய கீ ஆன்சர் பற்றிய வெளியீடும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது. 

ஆனால், தகுதித் தேர்வு முடிவு வெளியிடுவது தாமதமாவதற்கு முக்கியமான காரணம், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தமிழ்ப் பாடத்தில் 40 கேள்விகள் தவறானது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளதுதான். இந்தவழக்கு தொடர்பாக அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் டி.ஆர்.பி. தெரிவித்துவிட்டது. இந்த வழக்கின் முடிவு இந்த மாதம் 30ம் தேதி தெரிந்துவிடும். அந்த முடிவு வந்தவுடன், அக்டோபர் முதல்வாரத்தில், தயார் நிலையில் உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவும் இறுதி கீ ஆன்சரும் ஒரேநாளில் வெளியிடப்படும்’’ என்றார்.

 

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு

கல்வியியல் பட்டப்படிப்பு (பிஎட்) படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இதுக்குறித்து, இன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் விபரம் வருமாறு...
1. பிஎட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பிஎட் ., பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.

2. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

3. பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.

4. முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர்.

5. தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப்பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும்.

Saturday 28 September 2013

அக். 3 : சர்வதேச போராட்ட தினம்

உலக தொழிற்சங்க சம்மேளனம் ஒவ்வோராண்டும் அக்டோபர் 3 ஆம் நாளை சர்வதேச போராட்ட தினமாக அனுசரிக்குமாறு உலகில் உள்ள உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் அறை கூவல் விடுத்திருக்கிறது
.கடந்த மூன்றாண்டு காலமாக உலகத் தொழிற்சங்க சம்மேளனம் சர்வதேச போராட்ட தினத்தைக் கொண்டாடி வருகிறது. 2009 ஏப்ரல் 1 அன்று சுரண்டலுக்கு எதி ராக தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என்ற முழக்கத்துடன் இந்நாள் அனுசரிக்கப்பட்டது.2010இல் செப்டம்பர் 7 அன்று இந்நாள் அனுசரிக்கப்பட்டது. முதலாளித்துவ உலகம் ஆழமான நெருக்கடிக்குள்ளாகி சிக்கித் தவித் துக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘‘இந் நெருக்கடிக்கு நாம் உதவிட முடியாது’’ என்ற முழக்கம் அன்றைய தினம் முன்வைக்கப்பட்டது.

மிக வும் கடினமாகப் போராடி ஈட்டிய உரிமை களைப் பாதுகாத்திடுவோம் என்றும் முழக்க மிடப்பட்டது.இந்தியாவில், ஆட்சியாளர்களின் கொள் கை களை மாற்றக் கோரியும், உழைக்கும் மக்க ளின் அத்தியாவசியக் கோரிக்கைகளை முன்வைத்தும் நாடு தழுவிய அளவில் மத்தி யத் தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய சம் மேளனங்கள் இணைந்து நடத்திய நாடு தழு விய அளவிலான வேலை நிறுத்தமும் அனு சரிக்கப்பட்டதும், அதே நாளில் தற்செயலாக நடந்தது.உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் 16 ஆவது மாநாடு, 2011 ஏப்ரலில் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட் டின் போதுதான் உலகத் தொழிற்சங்க சம் மேளனத்தின் அமைப்பு தினமான அக்டோபர் 3 அன்று சர்வதேச போராட்ட தினம் அனு சரிக்குமாறு அறைகூவல் விடுக்கப்பட்டது. உலகத் தொழிற்சங்க சம்மேளனம் 1945 அக்டோபர் 3 - 8 தேதிகளில் பாரிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச தொழிற்சங்கங்களின் மாநாட்டில் அமைக்கப்பட்டது.

உலகத் தொழிற் சங்க சம்மேளனம் வரலாற்றின் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கேற்ப வர்க்கரீதியாக அமைந்த சர்வதேச தொழிற்சங்கமாக இன்றளவும் தொடர்கிறது. 16ஆவது மாநாட்டின் அடிப்படையில், 2011 அக்டோபர் 3, அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு, கூட்டு பேர உரிமைகளை உத்தர வாதப்படுத்துதல், தொழிற்சங்க மற்றும் ஜன நாயக உரிமைகளை வழங்குதல், வாரத்தில் ஐந்து நாட்களுடன் 35 மணி நேர வேலை, சிறந்த ஊதியம் ஆகிய கோரிக்கை சாசனங் களுடன் அனுசரிக்கப்பட்டது.2012ஆம் ஆண்டு இந்நாள் உலகம் முழு வதும் உண்ண உணவு, குடிதண்ணீர், சுகா தாரம், கல்வி மற்றும் வீட்டுவசதி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அனுசரிக்கப் பட்டது.உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைக் கவுன்சில் இக்கோரிக்கைகளை இறுதிப்படுத்துகையில், தொழிற்சங்கங்கள் மனிதகுலத்தின் இந்த அடிப்படைக் கோரிக் கைகளை எழுப்பிட வேண்டும் என்று குறிப் பிட்டது. உலகில் உள்ள பன்னாட்டு நிறுவனங் கள் பல நாடுகளிலும் உள்ள இயற்கைச் செல் வங்களை சூறையாடிச் செல்வதை அடுத்து இவ்வாறு கோரிக்கைகளை உலகத் தொழிற் சங்க சம்மேளனம் வடிவமைத்தது. இவ்வாறு உலகின் பல நாடுகளிலும் இயற் கைச் செல்வங்களைச் சூறையாடிச் செல்லும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் விதத்தில் இக்கோரிக்கைகளின் மீதான பிரச்சாரங்கள் நடைபெற வேண்டும் என்றும் உலகத் தொழிற் சங்க சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.2013இல் இயக்க தினம்உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைக் கவுன்சில் 2012ஆம் ஆண்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சமயத்தில், நாம் இந்த அடிப்படைக் கோரிக்கைகளின் மீதான பிரச்சாரத்தைத் தொடர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது.

மனிதகுலம் உயிர்வாழ்வதற்குத் தேவையான அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்போது மறுக்கப் பட்டிருக்கின்றன. எந்த விதத்திலாவது கொள் ளை லாபம் ஈட்ட வேண்டும் என்கிற சுரண் டும் கூட்டத்தினரின் வேட்கையானது, இயற் கை வளங்களை கொள்ளையடிப்பதற்கும், மக்களை இரக்கமின்றி சுரண்டுவதற்கும் இட்டுச் சென்றுள்ளது.எனவே, இந்த ஆண்டும் உணவு, தண் ணீர், சுகாதாரம், கல்வி மற்றும் வீட்டுவசதி முதலியவற்றிற்கான கோரிக்கைகளின் அடிப்படையில் நம் போராட்டங்கள் தொடரும். 85 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஊட்டச் சத்துக்குறைவால் பட்டினி கிடந்து வாடிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் பன் னாட்டு நிறுவனங்கள் உலகின் ஒட்டுமொத்த உணவுத் துறையையும் தங்கள் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் கூட நம் வேளாண் துறையா னது கார்ப்பரேட்மயமாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் அனைவருக்குமான பொது விநியோக முறை வேண்டுமென்கிற கோரிக் கையை ஏற்க மறுப்பதன் மூலமாக உணவுப் பாதுகாப்பு என்பதும் காலங்கடத்துவதற்கான பசப்பு வார்த்தையாக மாறிக் கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைவு, எடை குறை வாயிருக்கும் குழந்தைகள், ரத்தச்சோகை, மற்றும் பல்வேறு விதமான நோய்களுக்கு குழந் தைகள் ஆளாகியிருத்தல் ஆகிய அனைத்திற் கும் முறையான உணவு அவர்கள் உட்கொள் ளாததே காரணங்களாகும். உலகில் குழந்தை கள் அதிகம் உள்ள நாடு நம் நாடுதான். இதில் 40 விழுக்காட்டுக் குழந்தைகள் போதிய ஊட் டச்சத்தின்றி வாடி வதங்கிக் கொண்டிருக் கின்றன.நாட்டின் மக்கள்தொகையில் கணிசமான அளவிற்கு உணவு நெருக்கடியால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டின் வறுமை குறைந்துவிட்டதாக மிகவும் நகைக்கத்தக்க விதத்தில் ஆட்சியாளர்கள் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்த போதிலும் இதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதி கரித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் தரமான, பாதுகாப்பான, மலிவான விலையில் உணவுகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று உலகத் தொழிற் சங்க சம்மேளனம் கோருகிறது. இந்தியாவில், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரிசி/கோதுமை கிலோ கிராம் 2 ரூபாய் விலையில் மாதத்திற்கு 35 கிலோ கிராம் அனைவருக்கு மான பொது விநியோக முறை மூலமாக வழங் கப்பட வேண்டும் என்பதை நாம் கோரிக்கை யாக வைத்திருக்கிறோம்.தண்ணீர்மூன்றாம் உலகப் போருக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக தண்ணீர் தற்போது சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுத்த மான தண்ணீருக்கான உரிமை அடிப்படை உரிமையாகும். ஆயினும் நாட்டின் பெரும் பாலான பகுதிகளில் இது இன்றளவும் கன வாகவே நீடிக்கிறது.சர்வதேச அளவில், தண்ணீர் என்பது பன் னாட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய வர்த்தக மாக மாறியிருக்கிறது. உலகில் ஐந்து வயதுக் குக் குறைவாகவுள்ள 15 லட்சம் குழந்தைகள் போதிய அளவு பாதுகாப்பான குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததன் காரணமாக இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மக்களுக்கு நாள்தோறும் கிடைக்க வேண் டிய அடிப்படைத் தேவை தண்ணீர் என் பதையும், பாசனத்திற்கும் தண்ணீர் அவசியம் தேவை என்பதையும் ஆட்சியாளர்கள் அடி யோடு மறந்து விட்டு, மத்திய அரசு தன்னு டைய தண்ணீர்க் கொள்கையையும் அனைத்து நீர்வள ஆதாரங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கக் கூடிய விதத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.உலகத் தொழிற்சங்க சம்மேளனம், உல கில் உள்ள ஒவ்வொருவருக்கும் பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்கப்படுவது உத்தரவாத மாக்கப்பட வேண்டும் என்று கோருகிறது. கல்விஅனைவருக்கும் கல்வி என்பது உலகளா விய கோரிக்கையாகும். பல நாடுகளில் நவீன தாராளமயக் கொள்கைகள் ஆதிக்கம் செலுத் தக்கூடிய நிலையில், கல்வி என்பது மிகவும் லாபம் தரக்கூடிய தொழில்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. அரசாங்கம் கல்வி அளிக்க வேண்டும் என்பது அநேகமாக கைவிடப் பட்டு வருகிறது. கல்வித்துறையில் நெருக்கடி ஆழமாகிக் கொண்டிருப்பதை அடுத்து, இளைஞர்கள் கல்வி கற்பதற்கான தங்கள் அடிப்படை உரி மைகள் மறுக்கப்படுகிறார்கள். இந்தியாவின் கல்வி முறை அனைத்து அம்சங்களிலும் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. இது மாணவர்களின் கோரிக்கை மட்டுமல்ல. மத்திய அரசும் அடிப் படைக் கல்வியை ஓர் அடிப்படை உரிமை யாக்கி இருப்பதாகக் கூறிக்கொண்டிருக்கிறது.

ஆனால். முறையான உள்கட்டமைப்பு வசதி கள் இல்லாமல், போதிய அளவிற்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல், கல்வி அமைப்பு முறையும் கூட வர்க்க அடிப் படையில் பிளவுபட்டு நிற்கிறது. வசதி படைத்த ஒரு சிறிய அளவிலான கூட்டம் மட்டுமே பணத்தை வாரி இறைத்து தாங்கள் விரும்பும் கல்வியைப் பெறுவதை உத்தர வாதப்படுத்திக் கொண்டுள்ளது. அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த் தெடுப்பதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் கல்வி முறை அமைந்திட வேண் டும். இதற்கு, முன்பு குறிப்பிட்டிருப்பதைப் போல, ஆரம்ப நிலையிலிருந்து உயர் நிலை வரை நாட்டின் கல்விக் கொள்கையில் முழு மையாக மாற்றம் செய்யப்பட்டாக வேண்டும். அனைவருக்கும் இலவசக் கல்வி என்கிற நம் பிரச்சாரம் தொடர வேண்டும்.சுகாதாரம்சுகாதாரம் அளிக்கப்படுவது என்பது வர்த் தகமல்ல என்று கூறப்பட்டாலும்கூட, இந்திய மற்றும் பன்னாட்டு வர்த்தகக் கார்ப்பரேட்டு களின் கைகளில் அது ஒரு வளம் கொழிக்கும் தொழிலாக மாறி இருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு என்பது பிரதானமாகத் தனியார் துறையிடம் சென்றுவிட்டது. பொதுவாக மக்கள் தங்கள் குறைந்த வருமானத்தில் மிகப் பெரிய தொகையை இதற்காகச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டிருக் கிறார்கள். சமூகப் பாதுகாப்பு என்பது தொழிற்சங்கங் களின் சாதனைகளில் முதன்மையான இடத்தை வகிக்கக்கூடியது. அது இன்றைய தினம் கைகழுவப்பட்டுக் கொண்டிருக் கிறது. உயிர்காக்கும் மருந்துகள் கூட பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற் குள் முழுமையாகச் சென்றுவிட்டன. இந்தியா வில் மேற்கொள்ளப்படும் மருந்து உற்பத்தி எதுவாக இருந்தாலும் அது பன்னாட்டு பகாசுர கம்பெனிகளால் விழுங்கப்பட்டு விடுகின்றன. அரசுத்தரப்பில் அடிக்கடித் தம்பட்டம் அடிக்கப்படும் மருந்து விலைக் கட்டுப்பாடு, சுகாதார மிஷன் போன்றவை அரசாங்கத் தரப்பில் கூறப்படுவதுபோல் எந்தப் பாதிப்பை யும் ஏற்படுத்திட வில்லை.சுகாதாரப் பாதுகாப்பு என்பது முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்திட வேண்டும் என்பது உலகத் தொழிற்சங்க சம்மேளனத் தின் கோரிக்கையாகும். அவ்வாறு செய்யப்படு வதன் மூலமாகத்தான் தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போதும் சரி, ஓய்வுபெற்ற பின்னரும் சரி ஒரு சுகாதாரமான வாழ்க்கைக் கான அனைத்து அம்சங்களையும் உத்தர வாதப்படுத்திட முடியும்.வீட்டுவசதி வீட்டுமனைகளின் விலைகள் விண் ணை நோக்கி சென்றுகொண்டிருக்கக்கூடிய நிலையில், நாட்டில் நகரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய சூழலில், வீட்டு வசதி என்பது நாட்டு மக்களை எதிர்நோக்கி இருக் கக்கூடிய மிக ஆழமான பிரச்சனையாக மாறி இருக்கிறது.

பாதுகாப்பான, வசிக்கத்தக்க மற் றும் மக்களால் வாங்கத்தக்க அளவிற்கான இல்லம் என்பதும் அவ்வாறு வாங்கப்படும் இல்லம் ஒருவர் அமைதியாகவும் கண்ணியத் துடனும் வாழ்வதற்கு உகந்ததாக அமையக் கூடிய விதத்திலும், எவராலும் வலுக்கட்டாய மாக வெளியேற்றப்பட முடியாத நிலையிலும் இருந்திட வேண்டும் என்பது உலகத் தொழிற் சங்க சம்மேளனத்தினால் முன்வைக்கப் பட்டுள்ள கோரிக்கையாகும். நாட்டு மக்களில் பெரும்பகுதியினர் மிக வும் மனிதாபிமானமற்ற நிலைமைகளில் குடி சைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெரும் பகுதியினர் வீடற்றவர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் வீட்டுவசதிக்கான நம்முடைய பிரச்சாரமும் போராட்டமும் நம் முக்கியமான பணிகளில் ஒன்றாகும்.உலகத் தொழிற்சங்க சம்மேளனம் எழுப்பி யிருக்கின்ற இவ்வனைத்துக் கோரிக்கை களையும் முன்வைத்து, இதனுடன் இணைந் துள்ள 126 நாடுகளைச் சேர்ந்த 8 கோடியே 40 லட்சம் உறுப்பினர்கள் அக்டோபர் 3 அன்று உலகம் முழுதும் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் இறங்கிட இருக் கிறார்கள். இந்தியாவிலும், உலகத் தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைந்துள்ள அத் துணை அமைப்புகளும் அன்றைய தினம் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திடவுள்ளார்கள்.இவ்வியக்கத்தில் நம் சங்கத்தின் சார் பிலும் மிகப் பெரிய அளவில் பங்கேற்போம். நம் முடைய அடிப்படைக் கோரிக்கைகளாகவும் விளங்கிடும் இக்கோரிக்கைகளுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். மக்களுக்கு ஒரு நாகரிகமான வாழ்க்கையை உத்தரவாதப் படுத்துவதற்கான போராட்டத்திற்காக அவர் களையும் அணிதிரட்டிடுவோம்.

Thursday 26 September 2013

ஏழவது சம்பள கமிஷன் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
 இதற்கான உத்தரவை பிரதமர் மன்மோகன்சிங் பிறப்பித்துள்ளார். இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள் 2016-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய சம்பள கமிஷன் தலைவர், உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு கிடையாது: தமிழக அரசு

           ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு, தெரிவித்துள்ளது.வழக்கறிஞர் பழனிமுத்து என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், கூறியுள்ளதாவது:"ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும். இது தொடர்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிக்கையில், ஏற்கனவே மாநில அரசுகள் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்று கூறியுள்ளது. அதன் அடிப்படையில் ஆந்திரா, ஒடிசாவில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. தமிழக அரசும் இந்த முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால் நீதிபதி சத்திய நாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், "ஆசிரியர் தகுதி தேர்வில் ஜாதி ரீதியான பாகுபாடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இந்த தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக தகுதி தேர்வில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றால்தான் வேலை வாய்ப்பு என்ற கொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது. எனவே இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதி தேர்வில் மதிப்பெண் வழங்க தேவையில்லை" என்று கூறப்பட்டுள்ளது.இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோர் 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Sunday 22 September 2013

முதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் பாட கேள்வித்தாளை பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பதுடன் அந்த அச்சகத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் டி.ஆர்.பி. , முடிவு செய்துள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் பாட கேள்வித்தாளை, பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு, அபராதம் விதிப்பதுடன், அந்த அச்சகத்தை, கறுப்பு பட்டியலில் சேர்க்கவும், டி.ஆர்.பி. முடிவு செய்துள்ளது. 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881  முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், டி.ஆர்.பி. போட்டித் தேர்வை நடத்தியது. 1.5  லட்சம் பேர், தேர்வு எழுதினர். இதன் முடிவு, இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தமிழ் பாட கேள்வித்தாளில், 52  கேள்விகளில், எழுத்துப்பிழைகள் இருந்தன என்றும்  இதனால், அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர், ஐகோர்ட், மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு, டி.ஆர்.பி.  க்கு  கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. "கேள்விகளில் உள்ள எழுத்துப்பிழையால் கேள்வியை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படவில்லை எனினும், அந்த கேள்விகளை நீக்கிவிட்டு  மீதமுள்ள கேள்விகளை கணக்கிட்டு  மதிப்பெண் வழங்கலாம்  என்ற  டி.ஆர்.பி.  யின் கருத்தை  கோர்ட் ஏற்கவில்லை.  " பிழையான கேள்விகளை அச்சிட்டது ஏன் ? இதற்கு டி.ஆர்.பி. , தான் பொறுப்பு' என்று  கோர்ட் தெளிவாக கூறிவிட்டது. பெரிய சிக்கலுக்கு காரணமான  அச்சகத்தின் மீது டி.ஆர்.பி.  கடும் கோபத்தில் உள்ளது. 

இதுகுறித்து  டி.ஆர்.பி. வட்டாரங்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள அச்சகத்தில் தான்  கேள்வித்தாளை அச்சடித்தோம். "செக்யூரிட்டி பிரஸ்" என  கூறப்படும் இதுபோன்ற அச்சகங்களில்  கேள்வித்தாள்கள் தவிர  வேறு எதுவும் அச்சிடப்படாது. கேள்விகள் கலக்கப்பட்டு  பின்  " ஏ.பி.சி.டி. என  நான்கு பிரிவாக அச்சடிக்கப்பட்டன. இதில் " பி ' வகை கேள்வித்தாளில் தான்  எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுள்ளன. கம்ப்யூட்டரில் "பான்ட்" கோளாறு ஏற்பட்டதால்  எழுத்துப்பிழை ஏற்பட்டதாக  அச்சகம் தெரிவித்துள்ளது. அச்சடிப்பதற்கு முன்  அச்சகத்தில் உள்ள பாட வாரியான நிபுணர்கள் கேள்விகளை சரிபார்ப்பர்; அச்சடிக்கப்பட்டபின்  சரிபார்ப்பது கிடையாது. அப்படியே , சீலிடப்பட்டு அனுப்பப்படும். நடந்த குளறுபடிக்கு  அச்சகம் தான் காரணம். இதற்காக  சம்பந்தபட்ட அச்சகத்தின் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும். "பில்" தொகையில்  25 சதவீதம் வரை  அபராதம் விதிப்பது  அந்த அச்சகத்தை  கறுப்பு பட்டியலில்  சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கை குறித்து , ஆலோசித்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு  டி.ஆர்.பி. , வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய பென்சன் மசோதா சந்தை திவாலானால் அனைத்தும் பறிபோகும் : மக்களவையில் சிபிஎம் தலைவர் எச்சரிக்கை

ஒருவர் ஓய்வுபெறும்போது, தான் இவ் வளவுதான் ஓய்வூதியம் பெறப்போகிறோம் என்று சொல்லமுடியாத அளவில் உள்ள ஓர் ஓய்வூதியத் திட்டம் நாட்டிற்கு தேவையா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் புதனன்று ஓய்வூதிய சட்டமுன்வடிவின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பாசுதேவ் ஆச்சார்யா பேசியதாவது:

ஓய்வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையச் சட்டமுன்வடிவை எங்கள் கட்சி உறுதியாக எதிர்க்கிறது. 2004 ஜனவரி 1 முதல் இதனை ஐ.மு.கூட்டணி அரசு அமல் படுத்தி வருகிறது. அதனைச் சட்டரீதியாக மாற்று வதற்காக இச்சட்டமுன்வடிவினை இப்போது கொண்டு வந்திருக்கிறது. இதற்காக ஓர் ஆணை யம் உருவாக்கப் பட்டிருக்கிறது. தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ள பிரதமர், மேலும் சில கடினமான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த புதிய ஓய்வூதிய முறை யாகும்.

நம்முடைய அரசின் நவீன தாராளமயக் கொள்கைகள் அமெரிக்க அரசாங்கத்தின் கட்ட ளைப்படிதான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓய்வூதிய நிதியச் சட்டமுன்வடிவும் அதன் கட் டளைப்படிதான் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இவ்வாறு இதனை மாற்றவேண்டும் என்று அமெரிக்காவும், உலக வங்கியும் சர்வதேச நிதியமும் ஏன் துடிக்கின்றன? பழைய ஓய்வூதிய அமைப்பு, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவாக்கப்பட்டது. ஓய்வூதியம் என்பது ஒன்றும் கருணைத் தொகை அல்ல. நாம் சுதந்திரம் பெற்றபின் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு ஊதியக்குழுக்களைப் பார்த்து விட்டோம். இந்த ஆறு ஊதியக்குழுக்களுமே ஓய்வூதியம் என்பது ஊழியர்கள் மற்றும் தொழி லாளர்களின் பிரிக்கமுடியாத உரிமை என்று ஒரே சீராகப் பரிந்துரைத்திருக்கின்றன.

எனவே. இது அவர்களுக்கு அளிக்கப்படும் கருணை அல்ல. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஊழியர்களுக்கு உறுதியானமுறையில், பயன் பாடுகள் அளிக்கப்படவில்லை. ஊழியர்களின் சேமிப்பு பங்குச் சந்தையில் போடப்படவிருக் கின்றன. அது என்னாகும்? இது தொடர்பாக எந்த உறுதிமொழியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வில்லை. புதிய ஓய்வூதியச் சட்டத்தில் பாஜக திருப்தி கொண்டிருப்பது எப்படி? என்று எனக்குத் தெரியவில்லை. தொழிலாளர்களின் தொகை பங்குச்சந்தை யில் போடப்பட்டு, அதில் ஒரு பெரிய வீழ்ச்சி ஏற் பட்டால், ஊழியர்களுக்கு எந்தத் தொகையும் வழங்கப்படமாட்டாது. இப்படி உள்ள ஒரு சட்ட முன்வடிவை எப்படி பாஜகவினர் ஆதரிக் கிறார்கள்? மேலும் பொருளாதாரத்தில் பண வீக்கத்தின் அழுத்தத்திற்கு ஏற்ப ஊழியர்கள் பெறும் உண்மை ஓய்வூதியத்தின் மதிப்பும் குறையும். பல நிறுவனங்கள் ஆசைகாட்டி ஊழியர்களை மோசம் செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

குறிப்பாக நான்காம் நிலை ஊழியர்கள் ஏமாற்றப்படுவதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி 10 விழுக் காடு ஊதியம் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படுகிறது. இவ்வாறு 2004 ஜனவரி 1லிருந்தே பிடித்தம் தொடங்கிவிட்டது. இதே அளவு தொகையை அரசும் செலுத்த வேண்டும். இவ்விரண்டு தொகையை வைத்து ஒரு நிதியம் உருவாக்கப்படுகிறது. இதனை நிதிய மேலாளர் எனப்படும் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறார்கள். ஒரேயொரு மேலாளரைத் தவிர மற்ற அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகும். மாபெரும் தொகை இவர்களிடம் தூக்கிக் கொடுக்கப்பட இருக்கிறது.

இதன் பொருள், அரசாங்கத்தின் பணம், தனியார் நலன்களுக்காகப் பயன்படுத்தப் பட விருக்கிறது என்பதே. புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப் படுவதன் மூலம் இருவித ஊழியர்களும் உரு வாக்கப்பட விருக்கிறார்கள். ஒரு பகுதியினர் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உத்தர வாதமான வருமானத்தைப் பெறுவார்கள். புதிய ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்கள், தங்கள் சம்பளத்தில் மாதந்தோறும் பத்து விழுக்காடு சம்பளத்தைத் தரும் ஊழியர்கள். ஆனால், இவர்கள் ஓய்வு பெறும்போது எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார்கள் என்று அரசாங்கத்தால் இவர்களுக்குச் சொல்ல முடியாது.

ஐ.மு.கூட்டணி 1 அரசாங்கக் காலத்தில் இக்கேள்வி யைப் பலமுறை நான் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டேன். அவர்களின் தொகை சந்தை நிலவரத்தைச் சார்ந்திருக்கும் என்பதால் ஓய்வூதியம் எவ்வளவு பெறுவார்கள் என்று சொல்வதற்கில்லை என்று பதிலளித்தார். சந்தை திவாலாகிப்போனால், ஊழியர்கள் அனைத்தையும் இழந்து விடுவார்கள். இவ்வளவு மோசமான சட்டத்தை நாம் ஏன் கொண்டுவர வேண்டும்? நாட்டில் ஒரு கோடிக் கும் மேல் ஊழியர்கள் மத்திய அரசாங்கத்திலும், மாநில அரசாங்கங்களிலும், வங்கி மற்றும் இதர நிறுவனங்களிலும் பணியாற்றிக் கொண்டிருக் கிறார்கள். இவர்களின் எதிர்கால வாழ்வை ஏன் கேள்விக்குறியாக்குகிறீர்கள்? இது அரசிய லமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவிற்கு எதிரான தாகும்.

யாருடைய கட்டளைப்படி, யாருடைய நோக்கம் நிறைவேறுவதற்காக இதனைக் கொண்டுவருகிறீர்கள்? இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். அந்த ஒன்று என்ன? அதுதான் மிகவும் முக்கியமான பரிந்துரையாகும். நாடாளுமன்ற நிலைக்குழு தன் அறிக்கையில், ‘‘சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட அளவு ஓய்வூதியம் பெறுவதை உத்தரவாதம் செய்யக்கூடிய விதத்தில் ஒரு ஏற்பாட்டை அரசு உருவாக்கிட வேண்டும். அதன் மூலம் இதர ஓய்வூதியதாரர்களுக்கு எதிராக எந்தவிதமான பாதகமும் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிலைக்குழு விரும்புகிறது’’ என்று கூறியிருந்தது. மற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய ஓய் வூதியதாரர்களுக்கும் இடையே பாகுபாடு இல் லாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்று நிலைக்குழு கோரியிருந்தது. இந்த பரிந்துரை யைத்தான் அரசு கண்டுகொள்ளவில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக வர லாற்றுச் சிறப்புமிக்க இரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. நாட்டிலுள்ள 11 மத்திய தொழிற்சங் கங்கள் இணைந்து கடந்த பிப்ரவரி 20, 21 தேதி களில் நடைபெற்ற மேற்படி வேலைநிறுத்தத் திற்கான அறைகூவலை விடுத்தன. ஐஎன்டியுசி முதல் பிஎம்எஸ் உட்பட அனைத்துத் தொழிற் சங்கங்களும் இவ்வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. ‘‘அரசாங்கம் புதிய ஓய்வூதியத்திட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும், ஏனெனில் இது பெரும்பகுதி ஊழியர்களிடையே பாகுபாட்டை உருவாக்குகிறது. இது, ஓய்வூதியப்பயன்களைப் பெறுவதை ஊழியர்களிடமிருந்து பறித்துவிடு கிறது’’ என்று கூறித்தான் இவ்வேலை நிறுத்தம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டம் சட்டமானால், அடுத்த 34 ஆண்டுகளில் நாட்டிலிருந்து வெளி யேறும் பணத்தின் மதிப்பு தற்போதுள்ள 14 ஆயி ரத்து 284 கோடி ரூபாயிலிருந்து 57 ஆயிரத்து 088 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இது நாட்டிலுள்ள ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரா னது. எனவே அரசு, வழக்கத்திலிருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், ஓய்வூதிய தாரர் இறந்தால் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடை யாது. பணிக்கொடைக்கும் எந்த வாய்ப்பும் கிடையாது. எனவே இச்சட்டமுன்வடிவை நாங்கள் உறுதிபட எதிர்க்கிறோம். அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும்.

நன்றி- தீக்கதிர்